அபு அலா –
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நாளை செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவிருக்கும் தொற்றா நோய் சிகிச்சைகள் யாவும் எதிர்வரும் வியாழக்கிழமை (20) ஆம் திகதி நடைபெறும் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
15 ஆவது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றதையடுத்து, வைத்தியசாலையில் நடைபெறவிருக்கும் தொற்றாய் நோய் சிகிச்சைகள் யாவும் வேறு ஒரு தினத்திற்கு மாற்றம் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் இந்த சிகிச்சைகளை பெறவரும் நோயாளர்களில் அதிகம் வெளி பிரதேசங்களில் இருந்து வருகின்றவர்கள் என்பதாலும் இந்த சிகிச்சையின் தினத்தை எதிர்வரும் வியாழக்கிழமைக்கு மாற்றம் செய்ததாகவும் தெரிவித்தார்.
நாளை (18) ஆம் திகதி இந்த சிகிச்சையை பெறும் நோயாளிகள் மேற்குறித்த தினத்தன்று தங்களின் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.
0 Comments