-CM MEDIA-
அமெரிக்க அரசின் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியால் அபிவிருத்தி செய்யப்படவிருக்கும் 08 பாடசாலைகள் தொடர்பில் இனரீதியானபார்வையில் கருத்துக்கள் பரிமாறப்படுவது கிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையாக வாழும் நிலையைக் குழப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் இரு சமூகமும் இணைந்த நல்லாட்சியை கூறு போடவும் எடுக்கும் முயற்சியாகும். எனவே இது பற்றிய உண்மைகளை வெளியிட வேண்டியது எனது கடமையாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை வருமாறு:...
அமெரிக்க அரசு 2007ம் ஆண்டு இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மக்கள் தற்காலிகமாக ஒதுங்கும் இடங்களாகிய பாடசாலைகளை அவர்களைப் போஷிக்கும் வகையிலான அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டத்தினை ஆரம்பித்தது.
இதன் முதல் கட்டமாக 2007ம் ஆண்டு மூதூர் வலயத்தில் 07 பாடசாலைகளும்,மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் 02 பாடசாலைகளும்,கல்குடாமற்றும் பட்டிருப்பு வலயங்களில் தலா 01 பாடசாலையும் எனமொத்தமாக 11 பாடசாலைகளை அபிவிருத்தி செய்து 2011ம் ஆண்டில் கையளித்தது.
இதில் 10 தமிழ் பாடசாலைகளும் 01 முஸ்லிம் பாடசாலையும் அடங்கும். இதற்காகசெலவிடப்பட்டமொத்தத் தொகை 5.42 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத்தெரிவு இடம்பெற்ற போது கிழக்கு மாகாணசபை தாபிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் இரண்டாவாது கட்டம் 2012ம் ஆண்டிn முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 08 பாடசாலைகள் தெரிவுசெய்யபட்டன. கல்முனைவலயத்தில் 03 பாடசாலைகள்,
மட்டக்களப்புமத்திவலயத்தில் 03 பாடசாலைகள்,
அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை வலயங்களில் தலா ஒருபாடசாலை என 07 முஸ்லிம் பாடசாலைகளும், 01 தமிழ் பாடசலாலையும் இதில் அடங்கும். இவற்றிற்கான உத்தேச செலவுமதிப்பீடு 3.2 மில்லியன் அமெரிக்கடொலர்களாகும்.
இத்தெரிவு இடம்பெற்ற 2012ம் ஆண்டு தற்போதைய மாகாணசபை ஆட்சியில் இருக்கவில்லை என்பதும் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான ஆட்சியே அதிகாரத்திலிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருதிட்டங்களிலும் மொத்தமாக 19 பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் 11 தமிழ் பாடசாலைகளும் 08 முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடக்கப்படுள்ளன. தமிழ் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 5.2 மில்லியன் டொலர்களாகும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 3.4 மில்லியன் டொலர்களாகும்.
உலகின் மிகத்திறமை வாய்ந்த ஆய்வாளர்களைக் கொண்டே அமெரிக்க அரசு இப்பாடசாலைகளைத் தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க அரசின் தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கி வந்த திரு. மைக்றீட் என்பவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்நிதிபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப் பட்ட மக்கள் புகலிடம் கோரும் பிரதேசங்களுக்கானதாகும். எனவே இவ்வாறு எமது பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பெருமளவு நிதியை எமது மாகாணத்துக்கு வழங்கிய அமெரிக்க மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் தாம் இதுவரை வழங்கிய உதவிகளுக்கும் மேலாக ஒன்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை சம்பூர் பிரதேச மாணவர்களின் கல்விக்காக செலவிட முன்வந்துள்ளனர். இதற்கான கள ஆய்வினை கடந்த வியாழக்கிழமை 2015.08.07ம் திகதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் சகிதம் சம்பூர் பிரதேசத்துக்கு சென்று அமெரிக்கப் பொறியியலாளர்கள் மேற்கொண்டனர்.
மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வருகை தந்து கிழக்கு மாகாணசிங்களப் பிரதேசங்களிலுள்ளவெள்ளம் போன்றஅனர்த்தங்களால் பாதிக்கப்படும் பிரதேசங்களிலுள்ளமக்கள் புகலிடம் கோரும் பாடசாலைகளைஅபிவிருத்திசெய்வதா கஎமக்குவாக்குறுதியளித்துள்ளனர் .
இந்த நிதி ஒதுக்கீடு சம்மந்தமாக ஆளுணருடைய தலைமையில் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் அமெரிக்க குழுவினர், மாகாண சபை பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் பணிப்பாளர் உட்பட நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடையம் கலந்துரையாடப்பட்டபோது இதற்கான தெளிவும் இவற்றுக்குரிய நியாங்களும் அங்கு கலாந்தாலோசிக்கப்பட்டு இது கட்டாயம் செய்து முடிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிழக்கிற்கு வழங்கப்படும் நிதி இனவாதம் போன்ற காரணங்களால் இல்லாமல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நான் எடுத்த பெருமுயற்சியை தவறாக விளங்கிக் கொண்டு என் மீது இனச்சாயம் பூசநினைக்கும் சில அரசியல்வாதிகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
கிழக்குமாகாணசபை ஒருபோதும் இனவாதத்தை எச்சந்தர்பத்திலும் கையிலெடுக்காது என்பதை உறுதியாகக் கூற விரும்புகின்றேன்.
எமது கிழக்கு மாகாண கூட்டாற்சியில் எந்த விதமான இனமுறன்பாடானா நிதி ஒதுக்கீடுகளோ அல்லது அபிவிருத்தி வேலைத்திட்டங்களோ, அல்லது வேலைவாய்ப்புப் போன்றவைகளோ இவ்வாறான எந்த விடையமாக இருந்தாலும் அது விகிதாசார அடிப்படையை முன்னோக்கியதாகவும், அதே நேரத்தில் அத்தியவசியமாகத் தேவைப்பட்ட இடங்கள் அல்லது விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படு எங்களுடைய அனைத்து செயற்திட்டங்களும் நடைபெற்று வருகின்றன என்பதனை ஒரு கூட்டாட்சியின் கீழ் இயங்கும் ஒரு முதலமைச்ச்ர் என்ற ரீதியில் கூற விரும்புகிறேன்.
குறிப்பாக த்,வி.கூ.ஸ்ரீ.மு.கா. முன்னின்று நடாத்திவருகின்ற இக்கூட்டாட்சியினால் மாகானத்தில் இவ்விரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கின்ற நல்லினக்கமும் ,உறவும் தொடர்ந்து பேணப்படுவது மாத்திரமல்லாமல் அது இன்னும் பலப்படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வரவிருக்கின்ற இனப்பிரச்சனை தீர்வுகளில் உடன்பாடுகள் எட்டப்பட்டு ஒரே குரலாக ஒலிக்கவேண்டிய அவசியத்தை நாமனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான செயற்பாடுகளாக தமது முன்னகர்வுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
0 Comments