ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கைகள் நன்றாகவே உள்ளது , அதில் மாற்று கருத்து இல்லை...
ஆனால் , பிரதமர் அவர்கள் இந்த தேர்தலின் பின்பு நாடு தழுவிய ரீதியில் 11 தொழில் பேட்டைகள் அமைக்கபடும் என்று சொல்லி உள்ளார்கள்....
நமக்கான தொழில் பேட்டை எங்கு அமைய உள்ளது...?
*நாட்டின் மரக்கறி தேவையில் 60 % தேவையை நான் நிவர்திக்கிறோம்...
*மீன் பிடியிலும், இறால் வளர்ப்பிலும் நமது மாவட்டம் சிறந்து காணப்படுவதோடு அதற்கான புவியியல் ரீதியான அம்சத்தையும் கொண்டுள்ளது...
*அத்தோடு துறைமுகம் , விமான நிலையம் என்பன பக்கத்தில் அமைந்து உள்ளமை வியாபாரத்திற்கு உகந்ததாய் காணப்படுகிறது...
ஏனைய பகுதியில் உள்ளோர்கள் அவர்களின் வளங்களை பயன்படுத்த முஸ்தீபுகளை மேற்கொள்ளும் போது நம்மவர்கள் அடுத்தவர்களை சொறிவதில் தான் காலம் கடத்துகின்றனர் ..
இன்ஷா அல்லாஹ் இந்த தேர்தலின் பின்பு நாம் வென்றாலும் சரி, தோற்றாலும் சரி வருகின்ற அரசோடு இவ்வாறான விடயங்களை பேசுவோம்...
ஏனெனில் நாம் தேர்தலுக்காய் ஆரம்பமான கூட்டு அல்ல , அதற்கும் மேலே ..
சிந்தித்து உங்கள் வாக்குகளை பதியுங்கள்...
-Infas-


0 Comments