தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக அதிகளவு அமைச்சர்களை கொண்ட பாரிய அமைச்சரவையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுளவாவே சோபித தேரர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அதிகளவு அமைச்சர்களை நியமிப்பது ஓரு வேடிக்கையாகவும், போலி நடவடிக்கையாகவும் மாறியுள்ளது, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேவையற்ற விதத்தில் அதிகளவு அமைச்சர்களை நியமித்தது, எவரும் அவ்வேளை அதனை எதிர்க்கவில்லை,
ஜனாதிபதி சிறிசேன அந்த தவறை இழைக்க மாட்டார் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த போக்கை கருத்தில் கொள்ளும்போது 225 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,
தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தால் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நெருக்கடிகள் உருவாகலாம்.
புதிய அரசாங்கம் ஆரம்பத்திலேயே குழப்பத்திற்குள் சிக்குண்டுள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அதேவேளை சிலர் அதனை எதிர்த்து எதிர்கட்சியிலேயே பணியாற்ற போவதாக தெரிவித்துள்ளார், இதேவேளை ஜே.விபியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை, இவ்வாறான நிலையில் இதனை தேசிய அரசாங்கம் என அழைக்கலாம்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதாரண பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும், பிரதமர் இதனை செய்திருந்தால் தற்போதைய முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு அமைச்சர்களை நியமிப்பது ஓரு வேடிக்கையாகவும், போலி நடவடிக்கையாகவும் மாறியுள்ளது, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தேவையற்ற விதத்தில் அதிகளவு அமைச்சர்களை நியமித்தது, எவரும் அவ்வேளை அதனை எதிர்க்கவில்லை,
ஜனாதிபதி சிறிசேன அந்த தவறை இழைக்க மாட்டார் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த போக்கை கருத்தில் கொள்ளும்போது 225 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,
தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தீர்மானத்தால் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நெருக்கடிகள் உருவாகலாம்.
புதிய அரசாங்கம் ஆரம்பத்திலேயே குழப்பத்திற்குள் சிக்குண்டுள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தை ஆதரிக்கின்ற அதேவேளை சிலர் அதனை எதிர்த்து எதிர்கட்சியிலேயே பணியாற்ற போவதாக தெரிவித்துள்ளார், இதேவேளை ஜே.விபியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை, இவ்வாறான நிலையில் இதனை தேசிய அரசாங்கம் என அழைக்கலாம்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதாரண பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும், பிரதமர் இதனை செய்திருந்தால் தற்போதைய முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments