Subscribe Us

header ads

பிரான்ஸில் ஐந்தரை லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் பல் கண்டெடுப்பு...



ஐரோப்பாவில் மனித இனம் தோன்றியது குறித்து தெளிவான பதில் தேடி அகழ்வாராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஐரோப்பாவின் மிகப்பழமையான மனிதனின் மிச்சமாக ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தாடை எலும்பு ஜெர்மனியில் முன்பு 1907-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு பிறகு கடந்த வாரம் டாட்டவெல் பகுதியில் இரண்டு இளைஞர்கள், கோன் டே எல்’அரகோ குகைகளில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் இந்தப் பல்லை கண்டெடுத்தனர். இது ஆணின் பல்லா அல்லது பெண்ணின் பல்லா என்பது குறித்து ஏதும் தகவல் இல்லை. இது ஒரு வளர்ந்த மனிதனின் பல் என்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பல் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சத்து எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அமீலீ வியாலெட் என்ற பாரிஸ் அருங்காட்சியகத்தின் அகழ்வாராய்ச்சி பிரிவு மானுடவியலாளர் தெரிவித்தார்.

இதே பகுதியில் கடந்த 1969-ஆம் ஆண்டு நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘ஹோமோ எரக்டஸ்’ கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கண்டெடுப்பு நியாண்டர்தால் மனிதன் எப்போது, எப்படி உருவானான் என்பது குறித்த தெளிவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. நியாண்டர்தால் மனிதன் குகைகளில் வாழ்ந்த, நெருப்பை உருவாக்கியவன் என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. 

இந்த பல் ‘அரகோ 149’ எனப் பெயரிடப்பட்டுள்ள கீழ் தாடை பல் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய பொருட்கள் ஆறு லட்சம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments