(ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நாளை(22) புதன்கிழமை அன்று க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட மேற்படி வகுப்புகள் இவ்வாண்டு(2015) கல்லூரி அதிபர் ரி.மகேந்திரராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக கலைப்பீடத்தில் மாணவர்கள் இணைக்கப்பட்டு 22-7-2015 அன்று உயர்தர வகுப்பு அதிபர் தலைமையில் கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த ஆண்டில் ஏனைய பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ள அதே வேளை இதன் மூலம் இப்பாடசாலையின் 1ஏபி தரத்தினை பாதுகாப்பதோடு தரமான கல்வியை எதிர்காலத்தில் சமூகத்திற்கு பயனுள்ள முறையில் வழங்க முடியும்.
அத்துடன் தற்போதைய சூழலில் தடைப்பட்டுள்ள முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தை இதன் மூலம் சாத்தியப்படுத்த முடியும் எனவும் கல்லூரியின் பிரதி அதிபர் குறிப்பிட்டார்.
இவ் உயர்தர வகுப்பில் கலைப்பீடத்தில் இஸ்லாம்,அரபு,அரபியல் மூலதத்துவம்,புவியியல்,தமிழ், ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட உள்ளன.
எனவே இதில் இணைய ஆர்வமுள்ள வெளிமாவட்ட மாணவர்கள், மாணவர்கள் இருபாலாரும் உடனடியாக தொடர்புகளை மேற்கொள்ளுமாறும் கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளது.


0 Comments