நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது.
அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது.


0 Comments