Subscribe Us

மைத்­தி­ரியை தூஷித்த மஹிந்த ராஜ­ப­க்ஷவால் இன்று விகா­ரை­களின் புனி­தத்­து­வத்­துக்கு களங்கம்


தேர்தல் காலத்தின் போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய இன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தகாத வார்த்­தை­களால் தூஷித்து அவ­ரது நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று விகா­ரை­க­ளுக்கு சென்று அர­சியல் பேசி அதன் புனி­தத்­தைக்­கெ­டுத்துக் கொண்­டி­ருக்­கிறார் என்று ஊவா மாகாண முத­ல­மைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்தார்.
தியத்­த­லாவை கலா­சார மண்­ட­பத்தில் இடம்­பெற்ற ஹப்­புத்­தளை ஐ.தே.க. பிராந்­திய கூட்­டத் தொடரில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்கண்டவாறு தெரி­வித்தார்.
ஹப்­புத்­தளை ஐ.தே.க பிர­தான அமைப்­பாளர், ஊவா மாகாண உறுப்­பினர் செனரத் ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்­தொ­டரில் தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில் இன்று புனி­தத்­து­வ­மான மத வழி­பாட்டுத் தலங்­க­ளுக்கு செல்லும் முன்னாள் ஜனா­தி­பதி அர­சியல் பேசி ஜய­வேவா கோஷம் எழுப்பி இனத்­து­வே­ஷத்தை கக்­கு­கிறார். சாது சாது என கூற வேண்­டிய சாந்­தி­யான இடங்­களை களங்­கப்­ப­டுத்தி வரு­கின்றார்.
இச்­செ­யற்­பாடு உடன் நிறுத்­தப்­பட வேண்டும். மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டவர் மீண்டும் பிர­தமர் போட்­டிக்கு வாக்கு கேட்டு தேர்­தலில் குதிக்க ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சே­ன­விடம் மண்­டி­யி­டு­கிறார். மக்கள் இவ­ருக்கு நல்ல பாடம் புகட்­டு­வார்கள்.இன்று ஊவா மாகாண சபைக்கு தினமும் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் தொழில் கேட்டு வரு­கின்­றனர்.
என்னை நம்பி வாக்­க­ளித்த இம்­மா­காண மக்­க­ளுக்கு சிறந்த சேவை­யினை செய்ய சித்­த­மா­க­வுள்ளேன்.இன்று எதிர்க்­கட்­சி­யினர் முதியோர் உப­கார பணத்­தினை நிறுத்தி விட்­ட­தாக புர­ளி­களை கிளப்பி வரு­கின்­றனர். இவை பொய்­யான வதந்­திகள். நான் இது விடயம் குறித்து திறை­சேரி அதி­கா­ரி­க­ளிடம் தொடர்பு கொண்ட போது கால­தா­ம­த­மின்றி உரிய காலத்­திற்கு அந்த பிர­தே­சங்­க­ளுக்கு அவை அனுப்­பப்­ப­டு­வ­தாக தெரிவித்தனர்.
இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட எதிர்க்கட்சியினர் எமது நல்லாட்சியில் குறைகள் நடப்பதாக ஊடக மாநாடு வைத்து கூறுகின்றனர். இவற்றினை மக்கள் நம்பப்போவதில்லை என்றார்.

Post a Comment

0 Comments