திரைப்பட மற்றும் நாடக நடிகை உதயந்தி குலதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதியை சமர்ப்பிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனது வங்கிக் கணக்கை முடக் கும் நீதிமன்ற உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி உதயங்கி குலதுங்க தாக்கல் செய்துள்ள மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் உதயந்தி பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பினை பேணியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெலே சுதாவின் தொலைபேசியை சோதனை செய்தபோது இந்த தகவல் வெளியானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.அதன்படி, உதயந்தியின் வங்கிக் கணக்கில் நான்கு தடவைகள் தலா ஒரு இலட்சம் என நான்கு இலட்சம் ரூபா வெலே சுதாவால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் உதயங்கியின் பிறந்த தினத்திற்கு 50,000 ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உதயந்தி தனது சகோதரி ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 இலட்சம் ரூபா வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உதயங்கி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன் உதயந்தியின் வங்கிக் கணக்கு முடக்க உத்தரவை இரத்துச் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார். அதன்படி, வங்கிக் கணக்கை முடக்கி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதியை சமர்ப்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், வழக்கினை ஜூலை 3 ஆம் திக திக்கு ஒத்திவைத்துள்ளது.


0 Comments