Subscribe Us

ரோட்டில் மொபைல் போனை பயன்படுத்தி கொண்டு சென்ற பெண்ணின் கால் சிக்கி கொண்ட பரிதாபம்



நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அடித்து கொண்டே நடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது  தெரிவது இல்லை. இப்படி பாதைஒயை கவனிக்காமல்   மொபைல் போனை ப்யன்படுத்து  சென்ற சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரின்  கால் ரோட்டோரம் இருந்த கால்வாயின்  மூடி இரும்பு கம்பிகளுக்கு இடையில் மாட்டி கொண்டு அவர் 2 மணி நேரம் தவித்து உள்ளார்.

சீனாவை சேர்ந்த இளம் பெண் தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப டெக்ஸ்ட் அடித்து கொண்டே சென்றார். மொபைல் போனை பயன்படுத்துவதில் கவனம் செலுத்திய அந்த பெண் ரோட்டில் நடந்து செல்வதில் கவனம் செலுத்தவில்லை. ரோட்டோரம் இருந்த  வால்வாயின் மூடியில்  இரும்பு கம்பிகளுக்கு இடையில் இள்ம பெண்ணின் நீண்ட மெல்லிய கால் சிக்கி கொண்டது.  அவர் அந்த காலை தானே எடுக்க பல முறை முயற்சி செய்தார் ஆனால் முடியவில்லை அவருக்கு அழுகை அழுகையாய் வேறு வருகிறது.

வழியில் செல்வோர்கள் எல்லாம் அவருக்கு உதவி செய்யவந்து சிறிது நேரம்  முயற்சி செய்து விட்டு  முடியாது என திரும்பி சென்றனர் .

தீயணைப்பு படையினர் வந்து 45 நேர போராட்டத்திற்கு பிறகு கம்ப்பிகளை அகற்றி அந்த பெண்ணின் காலை விடுவித்தனர்.பிறகுதான் அவர் அழுகையை நிறுத்தினார். தீயணைப்பு படையினரும் ரோட்டில் செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறித்தி அனுப்பினர்.

இது குறித்து தீயணைப்பு படையின் செய்தி தொடர்பாளர்  மிங் லை கூறும் போது:-

நாங்கள் கம்பியை அகற்றி பெண்ணின் காலை எடுத்து விட்டோம். அவரது காலில் கம்பினால் ஏற்பட்ட சிறிய காயங்கள் மட்டும் உள்ளது அது விரைவில் குணமாகி விடும் என கூறினார்.அதனால் எப்போதும் ரோட்டில் செல்லும் போது கவனமாக செல்லுங்கள்  மொபைல் பேசிக்கொண்டோ , அல்லது  டெக்ஸ்ட் அடித்து கொண்டோ செல்லும் போது ஏதாவது விரீதம் ஏற்படலாம். 


Post a Comment

0 Comments