Subscribe Us

header ads

வெற்றிலை அல்ல எந்தச் சின்னத்தில் மஹிந்த போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயமாகும் : ஐ.தே.க.


வெற்­றி­லைச்­ சின்­னத்தில் அல்ல; எந்­தச்­சின்­னத்தில் போட்­டி­யிட்­டாலும் மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டை­வது நிச்­ச­ய­மா கும் என்று ­தெ­ரி­வித்த ஐ.தே.க.மஹிந்த அணி நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­கி­றது. இந்­தப் ­பொதுத் தேர்­தலில் மக்கள் இன­வா­தத்­திற்கு "சாவுமணி”­ அ­டிப்­பதும் நிச்­ச­யிக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் குறிப் பிட்டது.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.க.வின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.
இங்கு உரை­யாற்­றிய முன்னாள் பிரதி அமைச்­சரும், ஐ.தே.க. எம்.பியு­மான சுஜீவ சேன­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச வெற்­றிலைச் சின்­னத்தில் அல்ல அதை விடுத்து எந்தச் கட்­சியில் எந்தச் சின்­னத்தில் பொதுத்­தேர்­தலில் கள­மி­றங்­கி­னாலும் வெற்றி பெற­மாட்டார்.
கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்­தலை விடவும் மும்­ம­டங்கில் படு­தோல்­வி­ய­டைவார். எனவே மஹிந்த கள­மி­றங்­கு­வது எமக்கு எந்த விதத்­திலும் ஒரு சவால் அல்ல. மஹிந்­தவும் அவ­ருக்கு ஆத­ரவு வழங்கும் விமல் தலை­மை­யி­லான அணி­யி­னரும் அர­சி­யலில் அநா­தை­யாக்­கப்­ப­டு­வார்கள்.
கடந்த மஹிந்­தவின் ஆட்­சியில் நாட்டில் தலை­வி­ரித்­தா­டிய அரச பயங்­கா­ர­வாதம், வெள்­ளைவேன் கலாச்­சாரம், ஊழல் மோச­டிகள், வீண் விர­யங்­களை மக்கள் ஒரு போதும் மறக்­க­மாட்­டார்கள். அதற்­கான பாடத்­தையே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் மஹிந்­த­வுக்கு கற்­பித்­தனர்.எகிப்தில் சர்­வா­தி­கார ஆட்சி நடத்­திய ஹூஸ்னி முபாரக்கின் ஆட்சியும்இ மியான்­மாரில் குண்­டர்கள் ஆட்சி தோல்வி கண்­டன. அந்த வரி­சையில் மஹிந்­தவும் தோல்வி கண்டார். இத்­தோல்­வி­யோடு ஒதுங்­கி­யி­ருக்­கலாம்.
மீண்டும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட முயற்­சிக்­கின்றார். இதனை மக்கள் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் அவரை நிரா­க­ரிப்­பார்கள். எப்­ப­டி­யா­வது தேர்­தலில் வெற்­றி­பெற வேண்­டு­மென்ற நோக்கில் மஹிந்த அவ­ரது சார்பு அணியும் நாட்­டுக்குள் இன­வா­தத்தை தூண்­டி­வி­டு­கின்­றன.
தென்னை மரத்­தி­லி­ருந்து இரண்டு தேங்­காய்கள் விழுந்­தாலும் அதற்கு தமிழ் சிங்­கள தேங்காய் என இன­வாத முத்­திரை குத்­து­கின்­றனர். இவ்­வாறு இன­வா­தத்தின் உச்­சக்­கட்­டத்­திற்கு இவ் அணி­யினர் பய­ணித்­துள்­ளனர். இனியும் இந்த நாட்டில் மக்கள் இன­வா­த­திற்கு இட­ம­ளிக்­க­மாட்­டார்கள். இந்­தப்­பொ­துத்­தேர்­த­லோடு மக்கள் இன­வாத்­திற்கு சாவு மணி அடிப்­பது நிச்­ச­ய­மாகும்.
கடந்த 100 நாள் நல்­லாட்­சியில் நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பல நன்­மை­களை வழங்­கினோம். இத்­தேர்­தலில் ஐ.தே.க.வின் வெற்றி மக்­களின் வெற்­றி­யாகும். இலங்­கையில் ஐ.தே.க. ஆட்­சி­யி­லேயே பல அபி­வி­ருத்­திகள் ஏற்­பட்­டுள்­ளன. இந்­தி­யாவும் சீனாவும் அபி­வி­ருத்­தியில் தவழும் காலத்தில் நாம் மகா­வலி போன்ற பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம்.
பொதுத்­தேர்­தலில் ஐ.தே.க.வின் வெற்றி நாட்டின் எதிர்­கால அபி­வி­ருத்­திக்கு மூல­கா­ர­ண­மாக அமையும்.

உள்ளூர் உற்­பத்­தி­களை ஊக்­கு­வித்து தொழில் வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி நாட்டை வளப்­ப­டுத்­துவோம். ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­கார ஆசை இல்லாதவர். எனவே தான் தனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை குறைத்துக்கொண்டார். அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊழல் மோசடிகள் வீண்விரயங்களை எதிர்ப்பவர்.
எனவே எதிர்காலத்தில் ஐ.தே.க.வின் ஆட்சியிலேயே நாமும் மக்களும் முன்னேற்றம் காண்போம் என்றும் முன்னாள் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments