![]() |
| file picture |
செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கீதம் பலகலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வருபவர் சதீஷ்(18). இவர் நேற்று தனது நண்பர்களுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். திடீரென விசித்திரமாக எதையோ யோசித்த சதீஷ், ஸ்டேஷனை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ரெயில் எஞ்ஜின் மீது ஏறினார்.
தன்னை வளைத்து வளைத்து செல்பி எடுத்துக்கொண்ட அவர் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக பதட்டத்தில் உயரத்தில் இருந்த உயரழுத்த மின்கம்பியைத் தொட்டதால் தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடலில் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட தீப்புண்களுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments