Subscribe Us

header ads

திட்டமிட்டபடி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை


திர்­வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்ள 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, திட்­ட­மிட்­ட­வாறு அன்­றைய தினமே நடை­பெறும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.
பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் வெ ளி யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்கையிலேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.
அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்­திற்­க­மைய கடந்த வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணி­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­வ­தாக வர்த்­த­மானி அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டது. இத­னி­டையே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில், எதிர்­வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடை­பெறும் என அறிவிக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலையில் , ஆகஸ்ட் மாதம் நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்த கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்­சையின் நேர அட்­ட­வ­ணையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இருப்­பினும், புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையை குறித்த திக­தியில் நடத்­து­வதில் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை என்­பதால், திட்­ட­மிட்­டப்­படி ஆகஸ்ட் மாதம் 23ஆம் அன்றே அப்பரீட்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments