அபு அலா -
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சே னை கோட்ட பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழினுட்ப ஆய்வுகூட கட்டடம் நேற்று வெள்ளிக்கிழமை காலை (15) திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எஸ். எம் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நகர அபிவருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், மகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம் நசீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், மு.காவின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர், பாலமுனை மசூறா சபையின் ஆலோசகர் எம்.ஏ.சதாத் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments