அஹுங்கல பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நபர் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபா இலஞ்சமாக வாங்கியமைக்காகவே குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பிரசோதகரிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments