தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று (08) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 21 ஆம்
திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி செயற்பாடுகள் ஏப்ரல் 20 ஆம்
திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும்
குறிப்பிட்டுள்ளது.
0 Comments