Subscribe Us

header ads

போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்கு விசேட பொலிஸ் பிரிவு


நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள சகல பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் போதைப்­பொருள் சுற்­றி­வ­ளைப்­பிற்­கென தனி­யான விசேட பொலிஸ் பிரி­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். 
போதைப் பொருள் கடத்­தல்கள் மற்றும் விற்­ப­னை­யினை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த விசேட வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இப்­பி­ரி­வி­லுள்ள பொலி­ஸா­ருக்கு போதைப்­பொருள் சுற்­றி­வ­ளைப்பு குறித்து விசேட பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் மேலும் தெரி­வித்தார்.
போதைப் பொருள் சுற்­றி­வ­ளைப்­பிற்­கென நாட­ளா­விய ரீதியில் விசேட பொலிஸ் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்ள போதிலும் கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் உள்ள இந்த விசேட பிரிவே தற்­போது செயற்­பட்­டு­வ­ரு­கி­றது. ஏனைய பகு­தி­களில் படிப்படியாக இவ்விசேட பிரிவு தனது பணிகளை ஆரம்பிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments