Subscribe Us

header ads

19ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டாம் - சோபித தேரர்


19ம் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டாம் என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட மிக முக்கியமான அரசியல் சாசனத் திருத்தங்களில் 19ம் திருத்தச் சட்டம் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் 19ம் திருத்தச் சட்டம் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேறும் ஓர் சந்தர்ப்பம் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரி கட்சிகள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போது எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்..

தேர்தல் முறைமையில்  மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டு;ம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும், அரசியல் கட்சிகள் பலவும் இதே நிலைப்பாட்டைக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Post a Comment

0 Comments