இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிரதி நீதியமைச்சர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கைக்கான சீன பிரதி தூதுவர் இப்படி அச்சுறுத்தும் வகையிலான தொலைபேசி அழைப்பை எடுத்ததாக பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கைக்குள் முன்னெடுக்கப்படும் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பாரிய விமர்சனங்களை முன்னெடுப்பதை நிறுத்திவிடுமாறு சீனாவின் பிரதித் தூதுவர் அச்சுறுத்தும் தொனியில் கோரிக்கை விடுத்தார் எனவும் சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெறப்பட்ட அதிக்கூடிய வட்டி வீதம் குறித்து சேனசிங்க தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார்.
எவ்வாறாயினும் சீனாவின் ராஜதந்திரிகளுக்கு இப்படியான கோரிக்கை விடுப்பதற்கு எந்த உரிமையுமில்லை எனவும் பயமுறுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் சீன நிறுவனங்களுடனான சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வெளிப்படையாக செயற்பட வேண்டும் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments