-Ceylon Muslim-
மேற்குலகை
தளமாக கொண்ட சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேனா என அழைக்கப்படும்
அமைப்பு கடந்த காலங்களில் செய்துவந்த அட்டூழியங்களுக்கு எந்தவித எதிர்ப்பு
நடவடிக்கைகளும் இன்றி வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தொப்பி போட்ட
முட்டாள்கள் என்று ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது. இலங்கைத்திருநாட்டில்
அக்காலத்தில் வந்த வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்து பெண் கொடுத்து
இந்நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சிங்கள
மன்னர்களி்ன் வழித்தோன்றலில் வந்தவர்களா என்று எண்ணத்தோன்றுகிறது. வெறும்
ஊடக அறிக்கைகள் என்று அலம்பாமல் முடியுமாக இருந்தால் முஸ்லிம்கள்
சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று நிரூபிக்க வக்கிரு்தால் நேரடி
விவாதத்திற் வருமாறு அன்பாய் அழைக்கிறோம் என்று இலங்கையை தலைமையகமாக கொண்ட
மாற்றத்திற்கான இளைஞர்கள் படையணி தெரிவித்துள்ளது.
இலங்கையில்
தொலைக்காட்சி, மற்றும் வானொலி ஆகியவற்றில் இந்த விவாதம் நேரடியாக
ஒளிபரப்பப்படுவதற்குரிய அனைத்து வேலைப்பாடுகளையும் தாங்கள்
பொறுப்பெடுப்பதாகவும் கூறியுள்ள இப்படையணி மஹிந்த அரசாங்கத்தோடு இணைந்து
செய்த அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தான் ஆட்சியினையே மாற்றினார்கள்,
கட்சிகளுக்காகவோ பணத்திற்காகவோ ஜனாதிபதி மைத்திரிக்காகவோ அல்ல விடிவுகாலம்
வேண்டும் என்பதற்காகவே!
இதற்கு
தொடர்ந்தும் குந்தகம் விளைவித்து கொண்டிருக்கும் இவ்வமைப்பு இன்றும்
முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது, நேரடி
விவாவதத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் படையணி சர்வதேச உலமாக்களின்
ஆலோசனைகளையும் பெற்றுள்ளது. அது மாத்திரமின்றி டாக்டர் சாக்கீர் நாயக்
அவர்களுடனும் இது தொடர்பில் தொலைபேசி மூலம் பேசுவதற்கும் தயாராகியுள்ளது.
பொதுபலசேனா
அமைப்பு சொல்வது போல முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் என்று
நிரூபிக்க முடியுமாயின் நேரடி விவாத்திற்கு தாராளமாக அழைக்கிறோம். இஸ்லாம்
மார்க்கம் எப்போதும் மற்றைய மதங்களுக்கு எதிரானது அல்ல மாறாக சமாதானத்தை
எடுத்தியம்பும் ஒரு மார்க்கமாகும். ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதன் பொருள்
உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பதே.
இப்படிக்கு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி
இணைப்பு : https://www.facebook.com/ MYCCSRILANKA
9 Comments
"செய்த அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தான் ஆட்சியினையே மாற்றினார்கள்" இந்த வசனம் பிழையா படுதே...எந்த விஷயத்திலும் அல்லாஹ்வை மறந்துவிட வேண்டாம் சகோதரர்களே...... அனைத்தயும் மாற்றக்கூடிய சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. இப்படியான விவாதங்களை ஏற்படுத்தி பொதுபல சேனாவை இன்னொரு படி ஏற்றிவிடாதீர்கள். முட்டாள்களுடன் முட்டாள்களே விவாதம் செய்வார்கள்.
ReplyDeleteகட்டுரையாளர் கவணத்திற்கு தலைப்பிற்கும் உள்ளடக்கப்பட்ட கட்டுரைக்கும் சம்பந்தமில்லாமலுள்ளது முடிந்தால் தலைப்பை மாற்றவும். தலைப்பை நம்பி நான் ஏமாந்ததே மிச்சம்.
ReplyDeleteகட்டுரையின் மூலம் அறியமுடிவது விவாதம் நடைபெறுவதற்கான அழைப்பு அல்லது ஆலேசனை தானே தவிர விவாதம் உறுதிப்படுத்தப்படவே இல்லை அதுவும் இன்னும் டாக்டர் சாக்கீர் நாயக் அவர்களுடனும் பேசவில்லை
வாசகர்களை கவரவேண்டும் என்பதற்காக இப்படியா
Awar kurippittadu unmai tan headline farthu nanum amaandu witten
DeleteAllah emakku aatchyai maatri amaippadatkaana shakthiyey koduttan endru sonnal migawum nanraga irukkum..ungalai makkalukku matyhiyil famouse akkikolla wendum enbadatkaaga ungal welaigal amaindirundhaal wetri kidaikkadhu
ReplyDeleteveen vivazam seivazu musleemgalin panbu alla.
ReplyDeleteAnbin Nanbarkale,
ReplyDeletePls. Inda welaya seyya waanam.
Summa irrukura mattru matha pothu makkala ithan moolam thundi wida wenaam.
Neegal ungal AHLAKH moulam widai Kodungal.
Nabi kal Nayakam , Ethinai perudan Wiwaatham Seytharkal ?
Neengal Porumayaka irruppathu than ippa seyya weandiyathu. OK
appa ivaruku mattum thanislama pattri tharium sri lankala irikira muslimgalukku islatha patri thariyatha sinna pulla thanama illa ,,,,athukku sri lankala irikira marakas ,ulama sabai pariya palli ivaga allam hafis othura vagalukku islatha pathi anna solli kudukkuranga
ReplyDeleteதன் வினையால் தன்னைச் சுட்டு தவிப்பால் அலையும் சாரைக்கு சேலைன் தந்து உயிர்ப்பிக்கும் முயற்சி.
ReplyDeletepodubalasenakku engilsh tereyadu
ReplyDelete