Subscribe Us

header ads

போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் சவூதியில் கைது

போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரியளவிலான போதைப் பொருட்களையும் சவூதி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த போதைப் பொருள் ஓரு வகையிலான மூலிகை எனவும் குவாட் என இதற்குப் பெயர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி மற்றும் பேரீச்சம்பழ பக்கட்டுகளில் மறைத்து வைத்து இவர் இந்தப் போதைப் பொருளை எடுத்துச் சென்றுள்ளார்.
சவூதியின் தென் பிராந்தியமான ஜாசானில் வைத்து குறித்த இலங்கையரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இந்த இலங்கையரிடமிருந்து 450 பக்கட் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் இந்த வகை மலர் மூலிகைச் செடி அதிகளவில் காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments