Subscribe Us

header ads

ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

-பைஷல் இஸ்மாயில் –

கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (03) மாலை திருகோணமலை கச்சேரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரீபால சிறிசேனா கலந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற 3 மாவட்டங்களிலும் மேற்கொள்ளும் அபிவிருத்தியை 100 நாள் திட்டத்தின் கீழ் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என்று பணிப்புரை வழங்கப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments