ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லையென முன்னதாகவே அறிவித்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இருப்பினும் நேற்றைய தினம் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தேவையெதுவும் கட்சிக்கு இல்லையெனவும் அங்கு கூடியோர் கோரிக்கைப்படி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக்குவதா இல்லையா என்பது தொடர்பில் எதுவித முடிவும் இல்லையெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments