இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் இஸ்லாமிய தீனிய்யாத் (தர்மாச்சாரிய) பரீட்சைகளுக்குமான பாடப் புத்தகங்கள் மற்றும் அஹதிய்யா ஆசிரியர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வினை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி பரீட்சைகளுக்கு அமைவாக அஹதிய்யாப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும் போதனாசிரியர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் எதிர் வரும் 25ஆம் திகதி புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு-10, விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள அஞ்சல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்படும்.
மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் மத விவகார மற்றும் அஞ்சல் திணைக்கள அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
மேற்படி நிகழ்விற்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கெனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அஹதியாப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைகடக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
- ஏ.எஸ்.எம்.ஜாவித்
0 Comments