இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டர்ன் பேர்ள்ஸ் (Eastern Pearls) சமூக அமைப்பு மற்றும் கிரிக்கெட் கழகத்தின் இரண்டு வருட நிறைவையொட்டி ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகத்தினால் கத்தாரின் டோஹா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகம் 2015 ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
தலா 10 ஓவர் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டிக்கு ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் சிலோன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகியன தகுதி பெற்றன. இதில் 141 ஓட்டங்களினால் ஈஸ்டன் பேர்ள்ஸ் கழகம் வென்றது.
கடந்த சனிக்கிழமை கத்தார் அல்- ஸாத் (மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஈஸ்டன் பேர்ள்ஸ் அணியினர் 16 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களைப் பெற்றனர்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஆசாத் மற்றும் பாயிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தாலும் ஆசாத் துரதிஷ்டவசமாக 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுபக்கத்தில் சூபாயிஸ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ரிபான் 13 ஓட்டங்களைப் பெற்று தனது விக்கட்டை பறிகொடுக்க அடுத்து களமிறங்கிய சிபான் 13 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்றார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பாயிஸும் 27 பந்துகளில் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அதற்கடுத்து ஆட வந்த ஹக்கீம் அதிரடியாக 17 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்றார். 261 என்ற கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிலோன் ஸ்டார் அணியினர் ஹமீஸ் வீசிய முதல் ஓவரிலேயே 5 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்து தடுமாறினர்.
அவ்வணி சார்பில் ரிசாட் மாத்திரம் அதிரடியாக ஆடி 48 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையோர் ஈஸ்டன் பேர்ள்ஸ் அணியினரின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் விரைவாக ஆட்டமிழக்க இறுதியில் 8.4 ஓவர்களில் 119 ஓட்டங்களுடன் சலக விக்கெட்களையும் இழந்தது அவ்வணி. ஈஸ்டன் பேர்ள்ஸ் அணியினர் சார்பில் ஹமீஸ், ஆசாத் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இத் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத் தலைவர் எம். எம். ஜெஸ்மினும் கௌரவ அதிதிகளாக ஈஸ்டன் பேர்ள்ஸ் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவரான யாசிர் அலியார், பதில் தலைவர் எம்.ஐ.எம். பைஸால், பீ.எம். ரிசாட் மற்றும் அமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இத் தொடரில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட ஈஸ்டன் பேர்ள்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு பிரதம அதிதி எம்.எம். ஜெஸ்மினால் வெற்றிக் கிண்ணமும், பணப்பரிசும் அணித் தலைவர் ஏ.சி.எம் முபீனிடம் வழங்கப்பட்டது.
மற்றும் ஏனைய திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான விருதுகளை அமைப்பின் ஆலோசகர் சூயாசிர் அலியார், பதில் தலைவர் எம் .ஐ. எம்.சூபைசால், ஸஜாத் காசிம், பீ.எம். ரிசாட் மற்றும் அப்துல் சலாம் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

0 Comments