Subscribe Us

மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கவெனக் கூறி பணம் சேகரித்த இருவர் கைது!


புலமைப்பரிசில் வழங்கவெனக் கூறி சட்டவிரோதமாக பணம் சேகரித்த இருவர் செவனகல , மஹிந்துபுர பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஸ்டிக்கர்களை வழங்கி நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வசமிருந்து 37,000 ரூபா பயணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 26 மற்றும் 63 வயதான செவனகல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களை இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments