தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தேசிய அரசாங்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவினை விரைவில் அறிவிப்போம் என எதிர் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் தேசிய அரசாங்கம் தொடர்பாக உடனடியாக பதில் வழங்க முடியாது.
தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அதிகாரத்தினை பெற்றுக்கொண்டால் கட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியுமா என்று கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அறிவிக்க முடியும் எனவும் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
0 Comments