Subscribe Us

header ads

புதிய அரசாங்கத்தில் கொத்தமல்லியும், மஞ்சளும் அத்தியாவசிய பொருட்களுடன் இணைவு: தயாசிறி ஜயசேகர



தற்போதைய அரசாங்கம் இதுவரை மேற்கொள்வது நாட்டிற்கு நல்லது செய்வதற்கான நடவடிக்கைகள் அல்ல, பொறாமையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தின் பிரதானிகள் மீது இவர்கள் சுமத்தம் குற்றங்கள் ஒன்றுக்கொன்று பொய் என்று நிரூபிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மேலும் தற்போழுது எல்லா இடங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோதாபய ராஜபக்ச மீது சேறு பூசும் நடவடிக்கைகள் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகளே அதிகமாக உள்ளது, மற்றும் ஆயுத களஞ்சிய சாலை தொடர்பாகவும் தேடினார்கள்.
நான் கூறவிரும்புவது இந்நாட்டில் யுத்தம் நிறைவடைந்து 3500 இராணுவ வீரர்கள் சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு தற்பொழுதும் வேலை செய்கிறார்கள்.
சட்டபூர்வமான முறையில் களஞ்சிய அறை செய்துள்ளார்கள். அதனால் தான் உலகத்தில் இரண்டாவது சிறந்த கடற்படை தளபதி பாதுகாப்பு படை என நம் நாட்டு படையினர் தெரிவு செய்துள்ளார்கள்.
மேலும் கடந்த நாட்களில் சமப்ர்பிக்கப்பட்ட இடைக்கால வரவு- செலவு திட்டம் தொடர்பாக கூறுவது என்றால் அத்தியாவசிய 14 பொருட்களின் விலை குறைப்பதாக தற்போதைய அரசாங்கம் கூறியிருந்தது.
இறுதியில் மஞ்சள் மற்றும் கொத்தமல்லியின் விலைகளை மாத்திரமே குறைத்துள்ளார்கள். வரலாற்றில் முதல் தடவையாக கொத்தமல்லி, கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் இலங்கையின் அத்தியாவசிய பொருளாக தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒரு இராத்தல் பாண் வாங்கி மஞ்சள் ஒரு துண்டை வைத்து சாப்பிட்டுவிட்டு கொத்தமல்லி கொஞ்சம் அவித்து குடித்து விட்டு தூங்கி விடலாம் என தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments