(மூதூர் முறாசில்)
பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வரும் மூதூர் கரையோரப் பகுதியில் பாதுகாப்புச் சுவர் அமைக்கும் திட்டத்தை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல்,வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக் கிழமை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு போக்குவரத்துப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர் மற்றும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதம அதிதிகள் தக்வா நகர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இருந்து பேண்ட் வாத்தியத்தியதுடன் அழைத்துச் செல்லப்பட்டமை பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது.





0 Comments