Subscribe Us

header ads

சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள ஜெஸீரா மகளிர் சங்கம் , முபாறக் முதியோர் நலன்புரிச் சங்கம் இடையிலான சந்திப்பு

Mohamed Jafeer Mahroof



சம்மாந்துறை மலையடி கிராமத்திலுள்ள ஜெஸீரா மகளிர் சங்கம் மற்றும் முபாறக் முதியோர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் சங்க அங்கத்தவர்களுக்கும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போது கிராமத்தின் அபிவிருத்தி நடவடிக்கை மற்றும் சுயதொழில் முயற்சி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு கடந்த காலத்தில் இழந்த பாராளுமன்ற பிரநித்துவத்தினை பெற்றுத்தர முன்வரவேன்டும் என ஜெஸீரா மகளிர் சங்கம் மற்றும் முபாறக் முதியோர் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் சங்க அங்கத்தவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான எம்.ரி.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.யுனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி உட்பட அமைப்பின் பிரதிநிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments