(நாடகாசிரியர் பராக்கிரம நிரியெல்ல)
அவுஸ்திரேலியாவில் ஆதிவாசிகளின் நாடகக் குழுவொன்று உள்ளது. இந் நாடகக் குழுவினர் ஆதிவாசிகளுக்கு இடம்பெறும் அநியாயங்களை மிகக் கடுமையாக விமர்சித்து நாடகங்களை அரங்கேற்றுவார்கள். அரச நிறுவனங்களை கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துவார்கள். நாடகக்காரர்கள் ஏதோ ஒரு விடயத்தை கோடிட்டுக் காட்டுகின்றார்கள். அக் குறைப்பாடுகளைத் தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது. இதற்காக அரசாங்கம் நிதியை வழங்குகின்றது. எந்தத் தடையும் இல்லை. பொலிசாரை ஏவி அடித்து விரட்டுவதும் இல்லை. பிராந்திய அரசியல்வாதிகள் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவதும் இல்லை.
பிரேசில் நாட்டின் நகரமொன்றின் நகர சபை உறுப்பினராக சேவையாற்றிய ஒகஸ்டோ போல் (Augusto Boal) நகர சபை ஊழியர்களையும் சேர்த்துக்கொண்டு பயிற்சிப் பட்டறைகளை நடத்தி ‘Legislative Theater’ என்ற நாடக முறையொன்றை அறிமுகப்படுத்தினார். அரசாங்கத்திலும் ஆட்சியிலும் காணப்படும் குறைகள் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றார். அவற்றைத் திருத்திக்கொள்ளும் வழிமுறைகளையும் கலந்துரையாடுகின்றார். இதன் மூலம் சரியான பொறிமுறையை முன்வைக்கின்றார். இதற்கு அமைவாக பல சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நமது நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை இல்லை. ஜனநாயக சூழலை உருவாக்க முடியாத நிலையொன்று நமது நாட்டில் உள்ளது. விமர்சித்தல், குறைகளைச் சுட்டிக்காட்டுதல், திருத்தங்களை ஆக்கபூர்வ ஆலோசனைகளை முன்வைத்தல் போன்றவை ஆட்சியாளர்களினால் குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. இக் கண்ணோட்டத்தை மாற்றும் விதமாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மாற வேண்டும். அதற்கு முன்னோடியாக ‘மக்கள் மாற வேண்டும்’.


0 Comments