முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னர் மூன்று முக்கிய ஊழல் மோசடிகள் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது
செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசிலிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் பசில் ராஜபக்சவை அழைத்து விசாரணை நடத்துவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என குறித்த அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments