உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆக்லாந்து நகரில் 20–வது லீக்
ஆட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ‘ஏ’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா –
நியூசிலாந்து அணிகள் விளையாடின. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால்
போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆய்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் - டேவிட் வார்னர் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே சயுத்தி வீசிய பந்தில் பிஞ்ச் 14 ரன்னில் கிளின் போல்ட் ஆனார். பின்னர் வந்த வாட்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவர்களும் நிதானமாகவும் கவனமாகவும் விளையாடினர். எனினும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் வாட்சன் 23 ரன்களிலும், வார்னர் 34 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் கிளார்க் (12), ஸ்மித் (4), மேக்ஸ்வல் (1), மார்ஷ் (0) ஆகியோரும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரில் 151 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹடின் 43 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
152 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மெக்குலம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் நியூசிலாந்த அணி 5 ஓவரில் 50 ரன்களை கடந்தது. மெக்குலம் 21 பந்தில் அரைசதம் அடித்து அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
79 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறியது.
கடைசியில் வில்லியம்சன் மட்டும் களத்தில் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தும், 1 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்று ஆஸ்திரேலியாவும் மொத்தத்தில் மைதானமே பரபரப்பாக காணப்பட்டது.
ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸி., வீரர் கமின்ஸ் பந்து வீச, அதை எதிர்கொண்ட வில்லியம்சன் சிக்சர் அடித்து அதிர்ச்சி அளித்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆய்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்ச் - டேவிட் வார்னர் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே சயுத்தி வீசிய பந்தில் பிஞ்ச் 14 ரன்னில் கிளின் போல்ட் ஆனார். பின்னர் வந்த வாட்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவர்களும் நிதானமாகவும் கவனமாகவும் விளையாடினர். எனினும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் வாட்சன் 23 ரன்களிலும், வார்னர் 34 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.
15 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் வந்த கேப்டன் கிளார்க் (12), ஸ்மித் (4), மேக்ஸ்வல் (1), மார்ஷ் (0) ஆகியோரும் நியூசிலாந்தின் மிரட்டலான பந்து வீச்சால் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 32.2 ஓவரில் 151 ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹடின் 43 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய போல்ட் 5 விக்கெட்டுகளையும், சவுத்தி, விட்டோரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
152 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மெக்குலம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் நியூசிலாந்த அணி 5 ஓவரில் 50 ரன்களை கடந்தது. மெக்குலம் 21 பந்தில் அரைசதம் அடித்து அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
79 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறியது.
கடைசியில் வில்லியம்சன் மட்டும் களத்தில் உள்ள நிலையில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்தும், 1 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்று ஆஸ்திரேலியாவும் மொத்தத்தில் மைதானமே பரபரப்பாக காணப்பட்டது.
ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆஸி., வீரர் கமின்ஸ் பந்து வீச, அதை எதிர்கொண்ட வில்லியம்சன் சிக்சர் அடித்து அதிர்ச்சி அளித்தார்.
இதனால் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


0 Comments