Subscribe Us

header ads

முஹம்மத் நபி கேலிச் சித்திர சர்ச்சையினால் பிரான்சில் இஸ்லாத்திற்கு மீளுவோர் தொகை அதிகரிப்பு

சார்ளி ஹெப்தோ (Charlie Hebdo) சஞ்சிகையில் பிரசுரமான முஹம்மத் நபியவர்களின் கேலிச் சித்திரத்தைத் தொடர்ந்து அப் பத்திரிகை நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும், இத் தாக்குதலுடன் இஸ்லாத்தைத் தொடர்புபடுத்தி இஸ்லாமியர்; முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களும் அனைவரும் அறிந்த விடயங்களாகும். இக் கேலிச் சித்திரத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரான்சு நாட்டில் இஸ்லாத்திற்கு மீளுவோரின் தொகை அதிகரித்துள்ளதாக பாரிஸ் தலைநகர பெரியபள்ளி அறிவித்துள்ளது.
“இஸ்லாம் என்பது இதுவல்ல என்பதை அனைவருக்கும் காட்டவேண்டும் என்பதற்காக நான் இஸ்லாத்தைத் தழுவினேன்” என RTL Radio வானொலிக்கு வழங்கிய செவ்வியலில் இஸ்லாத்திற்கு மீண்ட வாலிபர் ஒருவர் குறிப்பிட்டார்.
பாரிஸ் நகர பெரியபள்ளியினால் 40 பேருக்கு (மதம் மாறுவோரை உறுதிப்படுத்தி வழங்கப்படும்) சான்றிதழ் விநியோகிக்கப்பட்டுள்ளதாக RTL Radio வானொலி கூறுகின்றது. 2014-ம் வருடம் இக் காலப் பிரிவுக்குள் 22 பேர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது என்றும் அவ் வானொலி சுட்டிக்காட்டுகின்றது.
இஸ்லாத்திற்கு மீளுவோரின் தொகை அதிகரிப்பது குறித்து வியப்புடன் கூறும் பாரிஸ் நகர பெரியபள்ளியின் இமாம், ‘இஸ்லாத்தைத் தழுவுவோரின் பல்வகைத் தன்மை எம்மை மேலும் வியப்பிலாழ்த்தியுள்ளது. வைத்தியர், பாடசாலையின் அதிபர், பொலிஸ் அதிகாரி என அனைத்து வகையினரும் ஷஹாதாவை மொழிவதற்காக இப் பள்ளியின் வாயிலைத் திறக்கின்றார்கள்’ எனக் கூறுகின்றார்.
சார்ளி ஹெப்தோ தாக்குதலின் ஓரிரு தினங்களின் பின், பிரான்சு நாட்டு திரைப்பட பெண் இயக்குனரான இஸாபெல் மாடிக் (Isabelle Matic) தான் இஸ்லாத்தைத் தழுவிய தகவலை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்: OnIslam
நன்றி -TPT-

Post a Comment

0 Comments