மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தான் மேற்கொண்ட சில சட்டவிரோத செயல்கள் சம்பந்தமான விடயங்கள் வெளியாகி விடும் என்ற காரணத்தினாலேயே முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தற்போது அமைதியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இரத்தினபுரி பெல்மதுளை பிரதேசத்தில் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் பவித்ரா வன்னியாராச்சியின் குண்டர்கள் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் மின்வலு எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற பல முறைகேடுகளை மறைக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருப்பதாக பேசப்படுகிறது.
பவித்ரா வன்னியாராச்சி கையாண்ட பல விடயங்கள் குறித்து தற்போதைய ஜனாதிபதி நன்கு அறிந்து வைத்துள்ளார்.


0 Comments