Subscribe Us

இரு நூல்களின் வெளியீட்டு விழா. (PHOTOS)




முசலி இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிலாவத்துறை மண்ணில் இரு நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றியத்தின் தலைவர் முனாஸ் அரபாத் காசிம் தலைமையில் 25/01/2015 நடைபெற்றது. 


அகத்திமுறிப்பு கவிஜெர் இஸ்வர்தீன் எழுதிய அணையாத அனல்கள் கவிதை தொகுப்பும் ஆசிரியர் தௌபீக் எழுதிய வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் என்ற வரலாற்று ஆய்வு ஆய்வு நூலும் இங்கே வெளியீடாக இடம்பெற்றன.

 இவ்விழாவிற்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய ஹுனைஸ் பாரூக் , முத்தலி பாவா பாரூக் அவர்களும் மாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதிஉத்தீன் பிரதேசசபைத் தலைவர் யஹியான் அவர்களும் சிறப்பு பேச்சாளராக சமூக ஜோதி M A ரபீக் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நூல் வெளியீடு வரலாறுகளில் இரு நூல்களை ஒரே மேடையில் வெளியிட்ட பெருமை முசலி இளைஞர் ஒன்றியத்தையே சாரும். இந்த விழாவிலே நூல் ஆய்வு நூல் அறிமுகம் என்பவற்றை பேராசிரியர் திரு நியாஸ் ( பல்கலைக்கழக விரிவுரையாளர் ) திறம்படச் செய்தது சிறப்புக்குரியது.








Post a Comment

0 Comments