ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
இங்கு, ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஐ.தே.க உறுப்பினர்கள் அலரிமாளிகையை ஊடகவியலாளர்களுக்கு சுற்றி காண்பித்தனர். அலரிமாளிகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக கணினிகள், பிரின்டர்ஸ் வைக்கப்பட்டிருப்பதையும் ஏனைய ஆவணங்கள் பொருட்களையும் ஐ.தே.க.வினர், காண்பித்தனர்.
வழமைக்கு மாறாக பல ஆவனங்கள் அலரிமாளிகையில் இருந்ததாகவும் மற்றும் பல ஆதாரங்களை என் சக ஊடகவியலாளர்கள் பர்வையிட்டதுடன் சில பொருட்களை குற்றத் தடப்புப் பிரிவு ஆராய்வதாகவும் எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்கப் படும் எனவும் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 Comments