Subscribe Us

header ads

புத்தளம் நகர சபைத் தலைவரின் MSD அதிகாரிகள் திருப்பி அழைக்கப்பட்டனர் !!

புத்தளம்   நகர சபையின் தலைவரும் சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகருமான   K.A.பாயிசுக்கு.  இது வரையில் வழங்கப்பட்டிருந்த மெய்க் காவலர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளனர். இன்று காலை அவரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 05 மெய்க் காப்பாளர்களும் தமது பெட்டி‌ ‌படுக்கைக‌ளை எடுத்துக் கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டனர்.
இவர்களை  அவசரமாக நகர சபைத் தலைவரிடம் இருந்து அகற்றுவதற்கு புத்தளத்தின் அரசியல்வாதி ஒருவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இலங்கையில் உள்ளுராட்சித் தலைவர்களுக்கு கணவான்கள் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை யெனினும்  விஷேட ஏற்பாட்டின் கீழ் K.A.B மெய்ப்பாதுகாவலர்கள் 05 பேர் வழங்கப்பட்டிருந்தனர்.  பிரதம நீதியரசர் சிறியானி பண்டாரநாயக்க அவர்க‌ளைப் பதவி நீக்கம் செய்யு முன்னரே அவரின் மெயப்பாதுகாவலர்கள் அகற்றப்பட்டிருந்தனர்  அவருக்கு செல்யூட் மரியாதை செய்யக் கூடாது என்று கூட போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளை இடப்பட்டிருந்தை நாடு அறியும்.
இது பற்றி பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு இலங்கையில்  அமைச்சர்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தவிர்ந்த வேறு யாருக்கும் மெயப் பாதுகாவலர்கள் வழங்கபடுவதில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் அப் போதே KAB க்கு மெயப் பாதுகாவலர் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.-Puttalam Today-

Post a Comment

0 Comments