Subscribe Us

header ads

பிரான்ஸில் வெளியாகின்ற சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதல் யார் மீது தவறு..??

.
முஸ்லிம்கள் தங்கள் உயிரினை விட மேலாக மதிக்கின்ற நபியினை கேவலப்படுத்தி பிரான்ஸில் வெளியாகின்ற சார்லி ஹெப்டோ பத்திரிகை கேலிச் சித்திரம் வரைந்ததற்கு அப் பத்திரிகைக்குள் புகுந்து 12 நபர்களை சுட்டுக் கொன்று பழி தீர்த்துள்ளதாக அங்கு தாக்குதல் நடாத்தியவர்கள் கூறி உள்ளார்கள்.அல்-குவைதா அமைப்பின் எமன் நாட்டுக் கிளையும் இதற்கு உரிமை கோரியுள்ளது.இதன் விளைவால் இன்று பாரிஸில் முஸ்லிம்களுக்கெதிராக கோரத் தாண்டவமே ஆட ஆரம்பித்துள்ளார்கள்.இது முஸ்லிம்களிற்கு ஒன்றும் புதியதல்ல வழமையாக நடப்பதுதான்.ஆட்டத்தை ஆரம்பித்தவர்கள் யார்? முஸ்லிம்களா? அல்லது இப் பத்திரிகை நடாத்துவர்களா?

ஒரு மதத்தை நிந்திப்பதனை ஒரு போதும் ஏற்க முடியாது.இதனைக் கண்டிக்க இவ் உலகத்திலே யாரும் இல்லை.முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு விடயம் இடம் பெற்றால் அதனை பிழை என அறியும் மனோ நிலை கூட இவ் உலகத்தார்களிடையே இல்லை.மதம் பற்றிய ஒரு விமர்சனம் செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கென்று ஒரு முறை உள்ளது.இவர்களது இஸ்லாமிய விமர்சனங்களை ஜாகிர் நாயக்கர்  போன்ற இஸ்லாமிய அறிஞ்சர்கள் பலர்  தவிடு பொடியாக்கி வருவதாலும் இவர்கள் மதம் பற்றிய இவ்வாறான அறிஞ்சர்கள் முன் வைத்துள்ள வினாக்களுக்கு பதில் வழங்க இயலாது தடுமாருவதாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்க இவ்வாறான சில்லறைத் தனமான விமர்சனங்களைச் செய்கிறார்கள்.தங்கள் நபியினைக் கேவலப்படுத்தியதால் முஸ்லிம்களை அவமானப்படுத்தியது அல்லாமல் இவர்கள் சாதித்தது என்ன? ஒரு சாதாரண ஜனாதிபதியினை விமர்சிப்பதென்றாலே அதற்கென்று ஆயிரம் சட்டங்கள் உண்டு.சற்று தரக் குறைவாக கதைத்தாலே அவர்களை உலகச் சட்டத்தில் கடுமையாக தண்டிக்க இடமுண்டு.பல ஜனாதிபதிகள் தங்கள் உயிரினை விட மேலாக மதிக்கும் நபியினை கேவலப்படுத்துவதனை எவ்வாறு ஏற்க இயலும்?

இவர்கள் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதற்கு பகரமாக இவர்கள் மதத்தினை முஸ்லிம்கள் நிந்தித்திருந்தால் நிலைமை என்ன? இன நல்லுறவு பாதிக்கப்பட்டிருக்கும் அல்லவா? இதன் விளைவை சற்று சிந்தனை செய்து பாருங்கள்? எத்தனை உயிர்கள் உலகை விட்டுப் பிரிந்திருக்கும்? ஆனால்,இதை எல்லாம் செய்யாது முஸ்லிம்கள் பொறுமை காத்தார்கள்.இனியும்,விடக் கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் அழிக்கப் புறப்பட்டார்கள்.இது சாதாரண மனிதன் ஒருவனுக்கு வரக் கூடிய  நியாயமான கோபம் தான்.இப் பத்திரிகை செய்திருந்ததை முஸ்லிம்கள் செய்திருந்தால் இதை விட பாராதூரமான விளைவுகளினை  இவ் உலகம் சந்தித்திருக்கும்.ஆனால்,முஸ்லிம்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.முஸ்லிம்கள் செய்ததன் விளைவால்  பிரச்சனைகள் எழுந்ததாகவும் சரித்திரத்தில் சம்பவங்களும் இல்லை.இஸ்லாம் பிற மதக் கடவுள்களை நிந்தனை செய்வதை தடுத்துள்ளது.இவர்கள் மதங்கள் இவ்வாறானவற்றை கற்றுக் கொடுக்காமையின் விளைவுகளில் ஒன்று தான் இதுவும் கூட.இதனை அறியாது செய்திருந்தால் விட்டிருக்கலாம்.2011 ம் ஆண்டும் இவ்வாறான செயல்களைச் செய்து முஸ்லிம்களின் எதிர்ப்பினை இப் பத்திரிக்கை சம்பாதித்துக் கொண்டது.மீண்டும் மீண்டும் செய்கிறது என்றால் இது முஸ்லிம்களை வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறது  என்பது தெளிவானது.இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள காழ்ப் புணர்வு காரணமாக இதனை யாரும் கட்டுப்படுத்தவும் மாட்டார்கள்.வேண்டுமென்று காழ்ப் புணர்வைக் கக்கினால் அதனை அடக்க இவ்வாறு நடப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை எனும் போது இவ்வாறு நடப்பது தவறும் இல்லை.


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை
இலங்கை.



Post a Comment

0 Comments