புத்தளம்
தள வைத்தியசாலைக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகின்றது. இதன் நிமிர்த்தம்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைவாக,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின், சமூக சேவைகள் அபிவிருத்திப் பகுதி, எதிர்வரும் 24.01.2015, சனிக்கிழமை அன்று முற்பகல் 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, புத்தளம் குவைத் வைத்தியசாலையில் (Kuwait Hospital) இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி
இந்த இரத்ததான நிகழ்வுக்கு இளைஞர்கள், யுவதிகள், அனைவரும், பொது நலன்
கருதி, மேற்படி அவசர தேவையை உணர்ந்து, இரத்த தானம் செய்து, எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் கருணையையும், நன்மைகளையும் சம்பாதித்துக் கொள்வோமாக…!
- காலம்:24.01.2015. சனிக்கிழமை
- நேரம்: முற்பகல் 09,00 மணி முதல் பிற்பகல் 02.00மணி வரை
- இடம்: புத்தளம் குவைத் வைத்தியசாலை


0 Comments