பைஷல் இஸ்மாயில் -
கடந்த மாதம் பெய்த அடைமழையினால் அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைக் குறைக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் பாதைகளை வெட்டி வெள்ள நீர் வடிந்தோட பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த திட்டத்தின் மூலம் வெட்டப்பட்ட பல பாதைகள் இன்று மிகவும் மோசன முறையில் காணப்படுவதால் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் வாகனங்களும் பயணிக்க முடியாமல் பல அசெளகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.
அதனைக் கருத்தில் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் சகல வீதிகளையும் மூடும் பணியில் இன்று காலை (16) ஈடுபட்டார்.
இதனை மூடுவதற்காக வேண்டி கனரக வாகனம் கொண்டும் பொதுமக்கள் உதவியுடனும் அப்பாதைகளை சீர் செய்து முடித்துக் கொடுத்தார்.
இப்பாதைகளை செப்பனிட ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச சபை தவிசாளர் அன்சிலுக்கும் பிரதேச சபை உறுப்பினர் முனாசுக்கும் ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
0 Comments