Subscribe Us

முன்னாள் பிரதமர் ஜயரத்ன வெளிநாடு செல்வதற்கு தடை

ஜனா­தி­பதித் தேர்தல் தினத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­பவம் ஒன்று தொடர்­பாக முன்னாள் பிர­தமர் டி.எம்.ஜய­ரத்ன மற்றும் அவ­ரது மகன் உட்­பட ஐவ­ருக்கு வெளி­நாடு செல்­வ­தற்கு நீதிமன்றம் தடை விதித்­து­ள­ளது.
ஜனா­தி­பதி தேர்தல் தினத்தின் போது­பொது வேட்­பா­ளரின் காரி­யா­லயம் ஒன்றைத் தாக்­கி­யது, அனு­ம­தி­யின்றி உட்­பி­ர­வே­சித்தல், துப்­பாக்கிப் பிர­யோகம் நடத்­தி­யமை என்­பவை தொடர்­பாக முன்னாள் பிர­தமர் டி.எம்.ஜய­ரத்­னவின் புதல்­வரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அனு­ராதா ஜய­ரத்ன மற்றும் கம்­பளை நக­ர­சபை உறுப்­பி­னர்கள் இருவர், உட­ப­லாத்த பிர­தேச சபை உறுப்­பினர் ஒருவர், அமைச்­சர்கள் பாது­காப்புப் பிரிவு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் உட்­பட ஐவர் மீது குற்றம் சாட்­டப்­ப­ட­டுள்­ளது.
கம்­பளை நீதிவான் உபுல் ராஜ­க­ருணா மேற்­படி சந்­தேக நபர்கள் வெளி­நாடு செல்­வ­தற்கு தடை விதித்­துள்ளார். இச்­சம்­ப­வத்­த­துடன் தொடர்­பு­டை­யவர் என சந்­தே­கிக்கும் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பினர் தர்­சன நயன தரங்க என்­பவர் மட்டும் தடுப்­புக்­கா­வலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களையும் தொடர்புடைய வாகனங்களையும் பொலிசார் தேடிவருகின்றனர்.

Post a Comment

0 Comments