முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குருணாகல் யாப்பஹூவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்காக தனியான பிரதேசம் ஒன்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் நிராகரித்தேன்.
நாட்டை நேசிக்கும் முஸ்லிம் மக்கள் தமது வாக்கை எனக்கே வழங்குவார்கள்.
அதேவேளை நாட்டின் இலவச கல்வியை இல்லாமல் செய்ய இடமளிக்க போவதில்லை எனவும் அரச துறையில் ஆட்குறைப்புச் செய்ய இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments