இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் பாணியில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா உடையணிய ஆரம்பித்துள்ளார். நேற்று கண்டியில் நடந்த முதலாவது பிரசார கூட்டத்தில் இந்த உடையில் வந்து அசத்தினார்.
அவரது உடைக்கு வரவேற்பு கிடைக்கிறதோ இல்லையோ, நேற்று மைத்திரி மேடைக்கு வருவதற்கு முன்னரே மக்கள் வெள்ளம் கூட்டத்திற்கு திரண்டு விட்டது. மக்கள் வெள்ளத்தை கண்டு எதிரணி தலைவர்களே திக்குமுக்காடிப் போனதை அவர்களின் நடவடி்கை வெளிப்படுத்தியது.
இந்தக்கூட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க, சஜித் பிரேமதாசா, சரத் பொன்சேகா, நவீன் திசநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹிருணிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments