Subscribe Us

header ads

கண்டியில் மைத்திரியின் கூட்டம் ஆரம்பம்; அந்த நான்கு அமைச்சர்கள் யார்???

கண்டியில் தற்போது ஆரம்பமாகவுள்ள பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனைவை ஆதரிக்;கும் பொர்துக் கூட்டத்தில் 04 அமைச்சர்கள் இணையவுள்ளதாக இன்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கண்டி நகரில் மைத்திரியின் கூட்டத்திற்கு பெரும்தொகையான மக்கள் திரண்டு வந்திருப்பதாக தெரிவிக்கப்படும் அதே நேரம் இதுவரை குறித்த அந்த 04 வரின் வருகையும் இடம்பெறவில்லை.

எனினும் அந்த 04 அமைச்சர்கள் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது உலாவந்து சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

அமைச்சர்களான ஜீவன் குமாரதுங்க, அதாவுத செனவிரத்ன , ரஞ்சித் சியம்பலாபிட்டடிய ,மேர்வின் சில்வா ,ரெஜினோல்ட் குரே மற்றும் பிரதியமைச்சர்களான திகாம்பரம், நந்தமித்ர ஏக்கநாயக்க , ராதாகிருஷ்னன் , மேல் மாகாண சபை உறுப்பினர் மல்சா குமாரதுங்க,மத்திய மாகாண ஆளுனர் டிக்ரி கொபேகடுவ ஆகியேரின் பெயர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர் என்ற ரீதியில் பரவலாக அரசியல் வட்டாரத்தில் அடிபடத் தொடங்கியுள்ளது.


-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments