Subscribe Us

header ads

ஹிருனிகா மைத்திரிபாலவுக்கு ஆதரவு




மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தற்பொழுது கொழும்பு 7 லில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான ஹிருனிகா பிரேமசந்திர இறுதியாக நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் மேல் மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு ஆளும் கட்சி சார்பாக 139,034 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுகொண்டாமை குறிப்பிடத்தக்கது.

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments