மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வெளியான செய்தி தொடர்பில் தாம் ஒன்றரை மணித்தியாலங்களாக விசாரணை செய்யப்பட்டதாக ராவய செய்தித்தாளின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜெயரஞ்சன தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 30ஆம் திகதியன்று வெளியான ராவய செய்தித்தாளில் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு 59வீத வாக்குகளும்,மஹிந்தவுக்கு 41வீத வாக்குகளும் கிடைக்கும் என்று அரச புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதியிடம் அறிக்கை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை வழங்காமையை அடுத்து அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த செய்தியை அரச புலனாய்வுப்பிரிவினர் மறுத்தபோதும் ராவயவின் ஆசிரியர் தமது செய்தியில் பிழையில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ராவய செய்தித்தாளில் குறித்தசெய்தி வெளியானதும், பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்கள் சிலர் ராவய விற்பனை பிரதிநிதிகளை அச்சுறுத்தியதாகவும் ஆசிரியர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றைய விசாரணையில் கேட்கப்பட்ட விடயங்கள் தாம் கூறிய பதில்கள் குறித்து ராவய ஆசிரியர் எந்தவிதமான தகவலை வெளியிடவில்லை
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments