Subscribe Us

header ads

திஸ்ஸவின் கட்சித்தாவலை தடுக்க விரும்பாத ரணில்

பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன கட்சியை விட்டு விலகி இரு நாட்களுக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அதநாயக்க அரசுடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், அப்போது அதை மறுத்திருந்த ஐ.தே.க செயலாளர் நேற்று வேட்பு மனுத்தாக்கலைத் தொடர்ந்து அரசுடன் இணைந்துகொண்டுள்ளார்.

 எனினும், இது தொடர்பாக ஏற்கனவே அறிந்திருந்தும் அதைத் தடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் விரும்பியிருக்கவில்லையென ஐ.தே.க வாரங்கள் தெரிவித்திருந்தன. கடந்த ஒரு சில நாட்களாகவே ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மாகாணசபை உறுப்பினர் ஒருவர் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலசுடன் திஸ்ஸ அதநாயக்க தொடர்பில் இருந்து வந்தமையை ஐக்கிய தேசிய கட்சித் தலைமை முற்றாக அறிந்திருந்ததாகவும் இவ்வாறான ஒரு கால கட்டத்தில் கட்சியை விட்டு வெளியேற எண்ணிய ஒருவரை தக்க வைத்துக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க விரும்பியிருக்கவில்லையெனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 எனினும் தொடர்ச்சியா இடம்பெற்ற பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடக சந்திப்புகளின் போது சகஜமாகவே திஸ்ஸ அதநாயக்க புழங்கியிருந்ததோடு தனது கட்சித் தாவல் குறித்த முன்னைய செய்தியை கண்ணீரோடு மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவரின் நெருங்கிய சகாவான மலிக் சமரவிக்ரமவின் வீட்டிலேயே திஸ்ஸ அதநாயக்க தங்கியிருந்ததால் தற்போது அவ்வீட்டைக் கைவிட்டு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்காலிகமாக தங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

JVP News
-AsM-
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments