Subscribe Us

header ads

காணாமல் போன எயார் ஏசியா விமானம் கடலின் அடித்தளத்தை சென்றடைந்துள்ளது?

காணா­மல்­போன எயார் ஏசியா இந்­தோ­னே­சிய விமா­ன­மான கியூ. இஸட். 8501 விமானம் கடலின் அடித்­த­ளத்தைச் சென்­ற­டைந்­துள்­ள­தாக தோன்­று­வ­தாக இந்­தோ­னே­சிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலை­யத்தின் தலைவர் பம்பாங் ஸொய­லிஸ்­ரியோ தெரி­வித்­துள்ளார்.
மேற்­படி விமா­னத்­து­ட­னான தொடர்பு துண்­டிக்­கப்­பட்­ட­துடன் ஒருங்­கி­ணைந்த தக­வல்­களின் பிர­காரம் அந்த விமானம் கடலின் அடித்­த­ளத்தை சென்­ற­டைந்­துள்­ள­தாக அனு­மா­னிக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறினார்.
ஞாயிற்­றுக்­கி­ழமை இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து 155 பய­ணி­க­ளு­டனும் 9 விமான ஊழி­யர்­க­ளு­டனும் பய­ணித்த வேளை காணாமல் போன அந்த எயார் பஸ் ஏ320–-200 விமா­னத்தை தேடும் நட­வ­டிக்கை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
மோச­மான கால­நிலை கார­ண­மாக விமா­னத்தின் பாதையை மாற்ற அந்த விமா­னத்தின் விமா­னிகள் கோரி­யி­ருந்த போதும், அந்த விமா னம் ராடர் கரு­வி­க­ளி­லி­ருந்து மறையும் முன்னர் அதி­லி­ருந்து உதவி கோரி அழைப்பு எதுவும் விடுக்­கப்­ப­ட­வில்லை என கூறப்­ப­டு­கி­றது.
கிழக்கு ஜாவா­வி­லுள்ள சுர­பயா நக­ரி­லி­ருந்து ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 05.35 மணிக்கு புறப்­பட்ட அந்த விமானம் காலை 8.30 மணிக்கு சிங்­கப்­பூரை சென்­ற­டை­ய­வி­ருந்­தது.
எனினும் காலை 6.24 மணிக்கு அந்த விமா­னத்தின் விமானி, அடர்த்­தி­யான முகில் கூட்­டங்­களை தவிர்க்க 38,000 அடி உய­ரத்­துக்கு விமா­னத்தை உயர்த்­து­வ­தற்கு அனு­மதி கோரி­யி­ருந்தார்.

எனினும் விமான பயண நெரி­சல்­களை கவ­னத்திற் கொண்டு விமா­னியின் கோரிக்­கைக்கு உட­ன­டி­யாக அங்­கீ­காரம் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ­ரது கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்கும் முன்னர் ராடர் கரு­வி­க­ளி­லி­ருந்து அந்த விமானம் மறைந்து விட்­ட­தாகவும் இந்­தோ­னே­சியா அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
விமானம் அபாயகரமான குறைந்த வேகத்தில் பறந்தது?
அந்த விமானம் மோச­மான கால­நிலை கார­ண­மாக மணிக்கு சுமார் 160 கி.மீற்றர் என்ற குறைந்த வேகத்தில் பய­ணித்­துள்­ள­தாக விமா­னத்­துறை சார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.
அவ்­வாறு குறைந்த வேகத்தில் விமா­ன­மொன்று பய­ணிக்­கின்­றமை அது ஸ்தம்­பி­த­ம­டைந்து செய­லி­ழப்­ப­தற்­கான அபா­யத்தை அதி­க­ரிக்கக் கூடி­யது என விமா­னத்­துறை சார் நிபு­ண­ரான ஜியோ­பிரே தோமஸ் தெரி­வித்தார்.

இதை­யொத்த நிலை­மை­யி­லேயே 2009 ஆம் ஆண்டு எயார் பிரான்ஸ் ஏ.எப். 437 விமானம் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­திற்கு மேலாக விபத்­துக்­குள்­ளாகி காணாமல் போன­தாக அவர் கூறினார்.
ராடர் தக­வல்­களின் பிர­காரம் அந்த விமானம் 36000 அடி உய­ரத்தில் குறைந்த வேகத்தில் பய­ணித்­துள்­ள­தாக கூறிய அவர் இது அந்த உய­ரத்தில் பறப்­ப­தற்­கான மிகவும் குறைந்த வேக­மாகும் எனத் தெரி­வித்தார்.
உய­ர­மான இடத்தில் ஐதான வளியில் மிகவும் குறைந்த வேகத்தில் விமா­ன­மொன்று பறக்கும் போது அந்த விமா­னத்தின் இறக்­கைகள் பறப்­ப­தற்கு ஆத­ர­வ­ளிக்­காது. இத்­த­கைய தரு­ணத்தில் விமான இயக்­கமே ஸ்தம்­பி­த­ம­டைய நேரிடும் என தோமஸ் குறிப்­பிட்டார்.
கடலில் அவ­தா­னிக்­கப்­பட்ட பொருள் எயார் ஏசியா விமா­னத்­திற்கு உரி­யது அல்ல
காணாமல் போன எயார் ஏசியா விமா­னத்தைத் தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த அவுஸ்­தி­ரே­லிய ஒரியன் விமா­னத்தால் கடலில் அவ­தா­னிக்­கப்­பட்ட பொருள் எயார் ஏசியா விமா­னத்­து­டை­யது அல்ல என இந்­தோ­னே­சிய உப ஜனா­தி­பதி ஜுஸுப் கல்லா தெரி­வித்தார்.
விமா­னத்­து­ட­னான தொடர்பு துண்­டிக்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து சுமார் 1,120 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள நங்கா தீவுக்கு அருகில் எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யது என சந்­தே­கிக்­கப்­படும் பொரு­ளொன்று மேற்­படி அவுஸ்­தி­ரே­லிய விமா­னத்தால் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­தோ­னே­சிய விமா­னப்­படை கட்­டளைத் தள­ப­தி­களில் ஒரு­வ­ரான டவி புட்ரன்தோ தெரி­வித்­தி­ருந்தார். எனினும் அந்தப் பொருள் எயார் ஏசியாவுக்குரியது என்பது இன்னும் நிச்சயப்படுத்தப்படவில்லை என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் மோசமான காலநிலைக்கு மத்தியில் அந்தப் பொருள் காணப்பட்ட பிரதேசத்தில் 15 கப்பல்களும் 30 விமானங்களும் தேடுதல்களை மேற்கொண்ட போது காணாமல் போன விமானத்திற்குரிய எந்தவொரு பொருளும் அங்கு காணப்படவில்லை என ஜுஸுப் கல்லா தெரிவித்தார்.
தற்­போது மேற்­படி தேடுதல் நட­வ­டிக்­கை­யா­னது ஜாவா கட­லி­லுள்ள பெலிதுங் தீவுக்கு அருகில் எண்ணெய் படலங்கள் மிதப்­பது அவ­தா­னிக்­கப்­பட்ட பிராந்­தி­யத்தை இலக்­காக கொண்டு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக இந்­தோ­னே­சிய விமா­னப்­ப­டையின் பேச்­சாளர் ஹாடி தஜஹ்­ஜன்டோ கூறினார்.
அந்த எண்­ணெய் ­ப­டலங்கள் எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யதா அல்­லது ஏதா­வது கப்­ப­லுக்­கு­ரி­யதா என்­பது குறித்து உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது எனக் ­கூ­றிய அவர், மேற்­படி எண்ணெய் படலங்கள் அவ­தா­னிக்­கப்­பட்ட பிராந்­தியம் கப்பல் போக்­கு­வ­ரத்து பாதையில் உள்­ள­தாக குறிப்­பிட்டார்.
மேற்­படி விமா­னத்தில் 138 வயது வந்­த­வர்கள், 16 சிறு­வர்கள், ஒரு குழந்தை உட்­பட 155 பய­ணி­களும் 7 விமான ஊழி­யர்­களும் பய­ணித்­துள்­ளனர்.அதே­ச­மயம் அந்த விமா­னத்தில் சிங்­கப்பூர், மலே­சியா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் ஆகிய நாடு­களைச் சேர்ந்த தலா ஒரு­வரும் தென் கொரி­யாவைச் சேர்ந்த மூவரும் 155 இந்தோனேசியர்களும் பயணித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments