இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர்
மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகி 18 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக பரீட்சைகள்
ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என். புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்கு 577084 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் பரீட்சை
நேரசூசியில் எதுவித மாற்றமும் இல்லையெனவும் ஆணையாளர் சிங்கள ஊடகமொன்றுக்கு
இன்று அறிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு குறைந்த நாட்களுக்குள்
நடாத்தப்படவுள்ளதாக செய்திகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments